ஜனவரி 3 முதல் மீண்டும் ‘தெறி’க்க விடும் விஜய்..!


அட்லி இயக்கிவரும் விஜய்யின் தெறி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் 40 மணி நேரம் படமாக்கினார்கள்.

பின்னர் ஜனவரி 2ஆம் தேதி சென்னை திரும்பும் விஜய் அடுத்த நாள் முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தெறிக்க விட இருக்கிறாராம். இப்படத்தின் டீசரை பொங்கல் தினத்தில் வெளியிட இருக்கின்றனர்.

விரைவில் நடைபெறவுள்ள படப்பிடிப்பு இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்பதால் தொடர்ச்சியாக படமாக்கவிருக்கிறாராம் அட்லி. இதன் மொத்த படப்பிடிப்பையும் ஜனவரி இறுதிக்குள் முடித்துவிட்டு பிப்ரவரியில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்க இருக்கிறார்கள்.

படத்தின் பாடல்களை மார்ச் மாதத்தில் வெளியிடவும் படத்தை தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிடவும் ‘தெறி’ குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் ரசிகா்களுக்கு இது விருந்தாக இருக்கும்.
ஜனவரி 3 முதல் மீண்டும் ‘தெறி’க்க விடும் விஜய்..! ஜனவரி 3 முதல் மீண்டும் ‘தெறி’க்க விடும் விஜய்..! Reviewed by FILMY GALATTA on 06:58 Rating: 5

No comments:

ads

Powered by Blogger.